Tuesday, 27 December 2016

நுகர்வோர் பாதுகாப்பு



முன்னுரை:
            உலகில் பிறந்தவர் அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் மூன்றும் அவசியமானதாகும். மனிதன் தனது தேவைக்குப் பல்வேறு பொருட்களை வாங்குகின்றான். பொருட்களை வாங்கி அனுபவிப்போரே நுகர்வோர் ஆவர்.
நுகர்வோர் பாதுகாப்பு:
            அமெரிக்காவைச் சேர்ந்த இரால்ப் நடார் என்பவர் நுகர்வோரின் நலன்களைக் காக்க இயக்கம் ஒன்றைத் துவக்கினார். இவ்வியக்கம் உலக நாடுகள் அனைத்திலும் இன்று செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்:
            இந்தியாவில் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும் இழப்பினை ஈடுகட்டவும் 1986இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பொருட்களில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர், வணிகர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கடமை:
            நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ முத்திரை, அக்மார்க் முத்திரை உள்ள பொருட்களை வாங்கவேண்டும். வாங்கும் பொருளுக்கு விற்பனைச் சீட்டு பெறவேண்டும். நுகர்வோர் தாம் வாங்கிய பொருள் தரம் குறைந்ததாக இருப்பின் நுகர்வோர் நீதி மன்றங்களை நாடி தீர்வு காணவேண்டும்.
முடிவுரை:
            வணிகர்கள் பொது நலன் கருதி நல்ல பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். நுகர்வோர்களாகிய நாம் மிகவும் கவனத்தோடு பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.