முன்னுரை:
நான் பிறந்து, வாழ்ந்து வரும் ஊர் புதுச்சேரி ஆகும்.
இது புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரமாகவும் உள்ளது. சிறந்த வணிக நகரமாக விளங்கும் புதுச்சேரியின் சிறப்புகளை இக்கட்டுரை விளக்குகிறது.
ஊர் பெயர்க்காரணம்:
அயல் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ‘பொதுகே’,
‘பொதுகா’ எனக் குறிப்பிடும் பகுதியே இன்று
‘புதுச்சேரி’ எனப் பெயர்பெற்றதாகக் கூறுகின்றனர்.
ஊர் எல்லைகள்:
புதுச்சேரியின் எல்லைகளாகக் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கிலும் வடக்கிலும் விழுப்புரம் மாவட்டமும், தெற்கே
கடலூர் மாவட்டமும் அமைந்துள்ளன.
ஊர் அமைப்பு:
புதுச்சேரி பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் வெள்ளை நகரம், கருப்பு நகரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரெஞ்சியர்
வாழ்ந்த பகுதி வெள்ளை நகரம் என்றும், தமிழர் வாழ்ந்த பகுதி கருப்பு
நகரம் எனக் கூறப்பட்டது. இன்று இந்நிலை மாறிவிட்டது.புதுச்சேரியில் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும்
சாலைகள் நேர்நேராக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
சிறப்பு:
அரவிந்தர் ஆசிரமம்,
மணக்குள விநாயகர் கோயில், அருங்காட்சியகம்,
கடற்கரை, பாரதி பூங்கா, பாரதியார்
நினைவு இல்லம், பாரதிதாசன் நினைவு இல்லம் ஆகியவை புதுச்சேரிக்குப்
புகழ் சேர்ப்பவை.
முடிவுரை:
நான், எங்கள் ஊரான புதுச்சேரியைப் பற்றி
எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் ஊரின் சிறப்பை எழுதுங்கள்.
I want a uvemaitodar vaakiyam
ReplyDeletethhara matten poda
ReplyDeleteSuper appu
ReplyDelete