முன்னுரை:
வணக்கம் மாணவர்களே!
என் பெயர் காகிதம். என்னைத் தூய தமிழில்
‘தாள்’ என்று கூறுவர். நான்,
என்னுடைய வரலாற்றை உங்களுக்குத் தெறிவிக்கிறேன்.
தோற்றமும் வளர்ச்சியும்:
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே எகிப்தியர்கள் ‘பேப்ரஸ்’ என்னும்
மரப்பட்டையைப் பயன்படுத்தி எனக்கு முதல்முதலாக வடிவம் கொடுத்தார்கள். கி.மு. 105-ஆம் ஆண்டிலேயே சீன நாட்டைச்
சேர்ந்த ‘டுசாய்லுன்’ என்பவர் மரப்பட்டையைக்
கொண்டு என்னை உருவாக்கினார்.
1850-ஆம் ஆண்டு
ஜெர்மனியைச் சார்ந்த ‘காட்லாப் செல்லர்’ என்பவர் மரக்கூழிலிருந்து என்னைப் புதிய வடிவில் தயாரித்தார். தற்பொழுது வேதியல் முறையில் பல வண்ணங்கள் கொண்டர தாள்கள் தயாரிக்கிறார்கள்.
பருத்தியிலை, கருப்பஞ்சக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தியும் என்னைத் தயாரிக்கிறார்கள்.
பயன்கள்:
அலுவலகங்கள்,
பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் என எல்லா இடத்திலும்
நான் பயன்படுகிறேன். செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கிறேன்.
என்மேல் எழுதப்படும் எழுத்து மூலமாய் பத்திரங்கள், அரசாணைகள், உருபாய் நோட்டுகள் ஆகியவை மதிப்பு மிக்கவையாக
ஆகின்றன.
முடிவுரை:
நான் பலவகையிலும்
பிறருக்குப் பயன்படுகிறேன். அதுபோல், என்
வரலாற்றைப் படிக்கிற நீங்களும் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.