Saturday, 3 June 2017

காகிதம் தன் வரலாறு கூறுதல்



முன்னுரை:
                        வணக்கம் மாணவர்களே! என் பெயர் காகிதம். என்னைத் தூய தமிழில்தாள்என்று கூறுவர். நான், என்னுடைய வரலாற்றை உங்களுக்குத் தெறிவிக்கிறேன்.
தோற்றமும் வளர்ச்சியும்:
                        ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள்பேப்ரஸ்என்னும் மரப்பட்டையைப் பயன்படுத்தி எனக்கு முதல்முதலாக வடிவம் கொடுத்தார்கள். கி.மு. 105-ஆம் ஆண்டிலேயே சீன நாட்டைச் சேர்ந்த டுசாய்லுன்என்பவர் மரப்பட்டையைக் கொண்டு என்னை உருவாக்கினார்.
                        1850-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்தகாட்லாப் செல்லர்என்பவர் மரக்கூழிலிருந்து என்னைப் புதிய வடிவில் தயாரித்தார். தற்பொழுது வேதியல் முறையில் பல வண்ணங்கள் கொண்டர  தாள்கள் தயாரிக்கிறார்கள். பருத்தியிலை,  கருப்பஞ்சக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தியும் என்னைத் தயாரிக்கிறார்கள்.
பயன்கள்:
                        அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் என எல்லா இடத்திலும் நான் பயன்படுகிறேன். செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கிறேன். என்மேல் எழுதப்படும் எழுத்து மூலமாய் பத்திரங்கள், அரசாணைகள், உருபாய் நோட்டுகள் ஆகியவை மதிப்பு மிக்கவையாக ஆகின்றன.
முடிவுரை:
                        நான் பலவகையிலும் பிறருக்குப் பயன்படுகிறேன். அதுபோல், என் வரலாற்றைப் படிக்கிற நீங்களும் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.