முன்னுரை:
வணக்கம் மாணவர்களே!
என் பெயர் காகிதம். என்னைத் தூய தமிழில்
‘தாள்’ என்று கூறுவர். நான்,
என்னுடைய வரலாற்றை உங்களுக்குத் தெறிவிக்கிறேன்.
தோற்றமும் வளர்ச்சியும்:
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே எகிப்தியர்கள் ‘பேப்ரஸ்’ என்னும்
மரப்பட்டையைப் பயன்படுத்தி எனக்கு முதல்முதலாக வடிவம் கொடுத்தார்கள். கி.மு. 105-ஆம் ஆண்டிலேயே சீன நாட்டைச்
சேர்ந்த ‘டுசாய்லுன்’ என்பவர் மரப்பட்டையைக்
கொண்டு என்னை உருவாக்கினார்.
1850-ஆம் ஆண்டு
ஜெர்மனியைச் சார்ந்த ‘காட்லாப் செல்லர்’ என்பவர் மரக்கூழிலிருந்து என்னைப் புதிய வடிவில் தயாரித்தார். தற்பொழுது வேதியல் முறையில் பல வண்ணங்கள் கொண்டர தாள்கள் தயாரிக்கிறார்கள்.
பருத்தியிலை, கருப்பஞ்சக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தியும் என்னைத் தயாரிக்கிறார்கள்.
பயன்கள்:
அலுவலகங்கள்,
பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் என எல்லா இடத்திலும்
நான் பயன்படுகிறேன். செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கிறேன்.
என்மேல் எழுதப்படும் எழுத்து மூலமாய் பத்திரங்கள், அரசாணைகள், உருபாய் நோட்டுகள் ஆகியவை மதிப்பு மிக்கவையாக
ஆகின்றன.
முடிவுரை:
நான் பலவகையிலும்
பிறருக்குப் பயன்படுகிறேன். அதுபோல், என்
வரலாற்றைப் படிக்கிற நீங்களும் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.
Thanks for your help
ReplyDeleteIt is used to cheat my tamil teacher
ReplyDeleteThanks for the help
ReplyDeleteI get 10 marks in my exam
ReplyDeleteI like it it is easy to read in my exam
ReplyDelete