நான் விரும்பும் தேசிய தலைவர் – ஜவகர்லால் நேரு
முன்னுரை:
இந்தியா விடுதலை பெற பலத்
தலைவர்கள் பாடுபட்டனர். அவர்களுள் ஒருவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
இவரே நான் விரும்பும் தேசியத் தலைவர்.
நேருவும்
குழந்தைகளும்:
நேரு, தம் நாட்டு மக்களிடம் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளிடம்
கொண்டிருந்த பேரன்பு அளவிட முடியாதது. இவர் குழந்தைகளிடையே இருக்கும்போது
தம் கவலை அனைத்தையும் மறந்து விடுவார். அதனால், தன் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியைக் குழந்தைகள்
நாளாகக் கொண்டாடச் செய்தார்.
இயக்கங்களும்
போராட்டங்களும்:
நேரு, 1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்
கலந்து கொண்டு சிரை சென்றார். 1941-இல் காந்தியடிகளின் சத்தியாகிரகப்
போரில் நேரு கலந்து கொண்டார். இதனால் இவருக்கு நான்கு ஆண்டுகள்
கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
பொதுச்
சேவை:
நேரு, தம் வாழ்நாள் முழுவதும் உலக அமைதிக்குப் பாடுபட்டார். வருங்கால இந்தியர் நல்வாழ்விற்கு வித்திட்டார். அதனால்
‘ஆசிய ஜோதி’ என்ற அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை:
நாட்டுக்கும் சமுதாயத்துக்கும்
நற்பணிகள் செய்த நேருவின் பெயரும், புகழும் என்றும் நிலைத்திருக்கும்.
நாமும் அவர் காட்டிய வழியில் நாட்டுக்குத் தொண்டு செய்வோம்.
Useful thanks
ReplyDelete