Sunday, 25 September 2016

நான் விரும்பும் தேசிய தலைவர் – ஜவகர்லால் நேரு



                                                நான் விரும்பும் தேசிய தலைவர்ஜவகர்லால் நேரு

முன்னுரை:
            இந்தியா விடுதலை பெற பலத் தலைவர்கள் பாடுபட்டனர். அவர்களுள் ஒருவர் ஜவகர்லால் நேரு ஆவார். இவரே நான் விரும்பும் தேசியத் தலைவர்.
நேருவும் குழந்தைகளும்:
            நேரு, தம் நாட்டு மக்களிடம் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளிடம் கொண்டிருந்த பேரன்பு அளவிட முடியாதது. இவர் குழந்தைகளிடையே இருக்கும்போது தம் கவலை அனைத்தையும் மறந்து விடுவார். அதனால், தன் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியைக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடச் செய்தார்.
இயக்கங்களும் போராட்டங்களும்:
            நேரு, 1942-இல்வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தில் கலந்து கொண்டு சிரை சென்றார். 1941-இல் காந்தியடிகளின் சத்தியாகிரகப் போரில் நேரு கலந்து கொண்டார். இதனால் இவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
பொதுச் சேவை:
            நேரு, தம் வாழ்நாள் முழுவதும் உலக அமைதிக்குப் பாடுபட்டார். வருங்கால இந்தியர் நல்வாழ்விற்கு வித்திட்டார். அதனால்ஆசிய ஜோதிஎன்ற அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை:
            நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நற்பணிகள் செய்த நேருவின் பெயரும், புகழும் என்றும் நிலைத்திருக்கும். நாமும் அவர் காட்டிய வழியில் நாட்டுக்குத் தொண்டு செய்வோம்.

1 comment: