Sunday, 11 September 2016

பாரதியார்



க.எண்
நாள்                               பாரதியார்
முன்னுரை:
                             நீடு துயில் நீங்க
                             பாடி வந்த நிலா
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர் பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
          பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர் _ இலக்குமி அம்மையார் ஆவர்.
          பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால்பாரதிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
          பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
          பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப்   புகழப்பெற்ற     பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.


க.எண்
நாள்                               பாரதியார்
முன்னுரை:
                             நீடு துயில் நீங்க
                             பாடி வந்த நிலா
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர் பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
          பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர் _ இலக்குமி அம்மையார் ஆவர்.
          பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால்பாரதிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
          பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
          பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப்   புகழப்பெற்ற     பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.

No comments:

Post a Comment