க.எண்
நாள் பாரதியார்
முன்னுரை:
“நீடு துயில் நீங்க
பாடி வந்த நிலா”
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர்
பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882
இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர்
_ இலக்குமி அம்மையார் ஆவர்.
பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால் ‘பாரதி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப்
பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப் புகழப்பெற்ற பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும்
நிலைத்து நிற்கிறது.
க.எண்
நாள் பாரதியார்
முன்னுரை:
“நீடு துயில் நீங்க
பாடி வந்த நிலா”
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர்
பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882
இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர்
_ இலக்குமி அம்மையார் ஆவர்.
பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால் ‘பாரதி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப்
பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப் புகழப்பெற்ற பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும்
நிலைத்து நிற்கிறது.
No comments:
Post a Comment