Tuesday, 27 December 2016

நுகர்வோர் பாதுகாப்பு



முன்னுரை:
            உலகில் பிறந்தவர் அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் மூன்றும் அவசியமானதாகும். மனிதன் தனது தேவைக்குப் பல்வேறு பொருட்களை வாங்குகின்றான். பொருட்களை வாங்கி அனுபவிப்போரே நுகர்வோர் ஆவர்.
நுகர்வோர் பாதுகாப்பு:
            அமெரிக்காவைச் சேர்ந்த இரால்ப் நடார் என்பவர் நுகர்வோரின் நலன்களைக் காக்க இயக்கம் ஒன்றைத் துவக்கினார். இவ்வியக்கம் உலக நாடுகள் அனைத்திலும் இன்று செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்:
            இந்தியாவில் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும் இழப்பினை ஈடுகட்டவும் 1986இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பொருட்களில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர், வணிகர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கடமை:
            நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ முத்திரை, அக்மார்க் முத்திரை உள்ள பொருட்களை வாங்கவேண்டும். வாங்கும் பொருளுக்கு விற்பனைச் சீட்டு பெறவேண்டும். நுகர்வோர் தாம் வாங்கிய பொருள் தரம் குறைந்ததாக இருப்பின் நுகர்வோர் நீதி மன்றங்களை நாடி தீர்வு காணவேண்டும்.
முடிவுரை:
            வணிகர்கள் பொது நலன் கருதி நல்ல பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். நுகர்வோர்களாகிய நாம் மிகவும் கவனத்தோடு பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

Tuesday, 29 November 2016

எங்கள் ஊர்



முன்னுரை:
            நான் பிறந்து, வாழ்ந்து வரும் ஊர் புதுச்சேரி ஆகும். இது புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரமாகவும் உள்ளது. சிறந்த வணிக நகரமாக விளங்கும் புதுச்சேரியின் சிறப்புகளை இக்கட்டுரை விளக்குகிறது.
ஊர் பெயர்க்காரணம்:
            அயல் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள்பொதுகே’, ‘பொதுகாஎனக் குறிப்பிடும் பகுதியே இன்றுபுதுச்சேரிஎனப் பெயர்பெற்றதாகக் கூறுகின்றனர்.
ஊர் எல்லைகள்:
            புதுச்சேரியின் எல்லைகளாகக் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கிலும் வடக்கிலும் விழுப்புரம் மாவட்டமும், தெற்கே கடலூர் மாவட்டமும் அமைந்துள்ளன.
ஊர் அமைப்பு:
            புதுச்சேரி பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் வெள்ளை நகரம், கருப்பு நகரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரெஞ்சியர் வாழ்ந்த பகுதி வெள்ளை நகரம் என்றும், தமிழர் வாழ்ந்த பகுதி கருப்பு நகரம் எனக் கூறப்பட்டது. இன்று இந்நிலை மாறிவிட்டது.புதுச்சேரியில் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் சாலைகள் நேர்நேராக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
சிறப்பு:
            அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், அருங்காட்சியகம், கடற்கரை, பாரதி பூங்கா, பாரதியார் நினைவு இல்லம், பாரதிதாசன் நினைவு இல்லம் ஆகியவை புதுச்சேரிக்குப் புகழ் சேர்ப்பவை.
முடிவுரை:
நான், எங்கள் ஊரான புதுச்சேரியைப் பற்றி எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் ஊரின் சிறப்பை எழுதுங்கள்.

Friday, 30 September 2016

உடல் நலம் காப்போம்



முன்னுரை:
          கிடைத்தற்கு அரியது மனிதப்பிறவி. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’ என்பது திருமூலரின் வாக்கு. எனவே, உடல் நலத்தைக் காக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
உடல் தூய்மை:
          நாம் காலையும் இரவும் பல் துலக்கவேண்டும். தினமும் குளித்து, தூய ஆடை அணிவது உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும். வாரம் ஒரு முறை கை, கால் விரல் நகங்களை சீராக வெட்டி, அழுக்குச் சேர்வதை தவிர்க்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை, வாய் ஆகியவற்றைக் கழுவ வேண்டும்.
உணவுப் பழக்கம்:
          பற்கள் பாதுகாப்பாக இருக்க குளிர்பானம், பனிக்கூழ் முதலானவற்றை உண்பதை தவிர்க்கவும். கீரை, காய்கறி, பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈ மொய்த்த, கெட்டுப்போன உணவுப் பண்டங்களை உண்ணக்கூடாது.
விளையாட்டு:
          காலையும் மாலையும் நண்பர்களோடு விளையாடுவது நம் உடலுக்கு நல்லது. நடத்தல், மிதிவண்டி ஓட்டுதல் முதலானவைச் சிறந்த உடற்பயிற்சிகள் ஆகும். நெடுநேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முடிவுரை:
          உடல் தூய்மையும், உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் முறையாய் அமைந்தால், நாம் நோயற்ற வாழ்வு வாழலாம். எனவே, நாமும் இவற்றை நம் வாழ்வில் கடைபிடிப்போம்.

Sunday, 25 September 2016

நான் விரும்பும் தேசிய தலைவர் – ஜவகர்லால் நேரு



                                                நான் விரும்பும் தேசிய தலைவர்ஜவகர்லால் நேரு

முன்னுரை:
            இந்தியா விடுதலை பெற பலத் தலைவர்கள் பாடுபட்டனர். அவர்களுள் ஒருவர் ஜவகர்லால் நேரு ஆவார். இவரே நான் விரும்பும் தேசியத் தலைவர்.
நேருவும் குழந்தைகளும்:
            நேரு, தம் நாட்டு மக்களிடம் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளிடம் கொண்டிருந்த பேரன்பு அளவிட முடியாதது. இவர் குழந்தைகளிடையே இருக்கும்போது தம் கவலை அனைத்தையும் மறந்து விடுவார். அதனால், தன் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியைக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடச் செய்தார்.
இயக்கங்களும் போராட்டங்களும்:
            நேரு, 1942-இல்வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தில் கலந்து கொண்டு சிரை சென்றார். 1941-இல் காந்தியடிகளின் சத்தியாகிரகப் போரில் நேரு கலந்து கொண்டார். இதனால் இவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
பொதுச் சேவை:
            நேரு, தம் வாழ்நாள் முழுவதும் உலக அமைதிக்குப் பாடுபட்டார். வருங்கால இந்தியர் நல்வாழ்விற்கு வித்திட்டார். அதனால்ஆசிய ஜோதிஎன்ற அழியாப் புகழ் பெற்றார்.
முடிவுரை:
            நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நற்பணிகள் செய்த நேருவின் பெயரும், புகழும் என்றும் நிலைத்திருக்கும். நாமும் அவர் காட்டிய வழியில் நாட்டுக்குத் தொண்டு செய்வோம்.

Sunday, 11 September 2016

பாரதியார்



க.எண்
நாள்                               பாரதியார்
முன்னுரை:
                             நீடு துயில் நீங்க
                             பாடி வந்த நிலா
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர் பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
          பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர் _ இலக்குமி அம்மையார் ஆவர்.
          பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால்பாரதிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
          பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
          பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப்   புகழப்பெற்ற     பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.


க.எண்
நாள்                               பாரதியார்
முன்னுரை:
                             நீடு துயில் நீங்க
                             பாடி வந்த நிலா
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்டவர் பாரதியார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் _ இளமையும்:
          பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11-12-1882 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சின்னசாமி ஐயர் _ இலக்குமி அம்மையார் ஆவர்.
          பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் திறமை பெற்றிருந்தமையால்பாரதிஎன்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இயற்றிய நூல்கள்:
          பாரதியார் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி முதலிய நூல்களை இயற்றினார்.
தொண்டுகள்:
          பாரதியார் தமிழ்த் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றியவர். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர். இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்.
முடிவுரை:
‘சிந்துக்குத் தந்தை’, ‘கவிதைக் குயில்’ எனப்   புகழப்பெற்ற     பாரதியார் 11-9-1921இல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.