முன்னுரை:
‘வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’
என்பார், நம் தமிழ்க்கவி பாரதியார். வள்ளுவனைத் தந்தது தமிழகம். அந்த வள்ளுவன் தந்ததோ திருக்குறள். நாடு, மொழி, இனம், சாதி, சமயம், காலம் முதலிய வேறுபாடுகள் இன்றி, உலக மக்கள் அனைவராலும் போற்றத்தக்க அற நெறிகளைக் கூறும் நூல், திருக்குறள் ஆகும்.
நூலின் அமைப்பு:
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பகுதிகளாய் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்களைக் கொண்டது.
நூல் கூறும் கருத்துகள்:
திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ எனப் போற்றப்படுகிறது. இந்நூல் மக்களின் வாழ்க்கை செம்மையாய் அமைவதற்கான கருத்துகளைக் கொண்டுள்ளது. துறவு, இல்லறம், கல்வி, கேள்வி, அரசியல், ஆட்சி முறை என உலகியல் வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துகளை இந்நூல் கூறுகிறது.
பயன்கள்:
உலக வாழ்வில் ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான வழி முறைகளை நாம் அறிய முடிகிறது. ‘பிறப்பினால் எல்லாரும் சமமே’ என்ற உன்னதமான கருத்தை நமக்கு உணர்த்துகிறது.
என்னைக் கவரக் காரணம்:
இரண்டு அடிகளில் எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைச் செய்யக் கூடாது எனக் கூறுகிறது. கல்வியின் சிறப்பையும், கல்லாமையின் இழிவையும் எடுத்துக் கூறுகிறது.
முடிவுரை:
திருக்குறள் குறைந்த சொற்களில் சிறந்த கருத்துகளைச் சுருங்கச் சொல்லி விளங்க உரைக்கின்றது. என்னைக் கவர்ந்த இந்நூலை அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment