முன்னுரை:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் இருப்பவர்கள் அந்நாட்டின் இளைஞர்கள். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், நவின உத்திகளைக் கையாளுதல் போன்ற பன்முகத் திறன் கொண்டவர்கள் இளைஞர்கள். அதனால்தான், சுவாமி விவேகானந்தர் ‘இளைஞர்கள் கைகளில் நாடு உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகுக்கு உணர்த்தினார்.
தொண்டு:
இளைஞர்கள் சமுதாய உணர்வு உடையவர்களாய் வளர்ந்தால் தான் வீடும், நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.
இளைஞர்களின் பங்கு:
வறுமை, கல்வி இன்மை, அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகச் சிற்றூர்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இளைஞர்கள் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கானச் செயல்களைச் செய்யவேண்டும்.
பிற பணிகள்:
படித்து முடித்தவுடன் அயல் நாடுகளுக்குச் சென்று வேலை பார்பதைவிடத் தாய் நாட்டில் வேலை பார்த்து நம் நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும். புயல், வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும். காலரா, பன்றிக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை:
இன்றைய இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாய் மாற்றும் திறமை படைத்தவர்கள். நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் தனித்திறமைகளைப் பயன்படுத்தினால் விரைவில் நாம் வளர்ந்த இந்தியாவை, வல்லரசு இந்தியாவை உருவாக்க முடியும்.
No comments:
Post a Comment