2, தாழை வீதி
சோலை நகர்
முத்தியால்பேட்டை
22.2.2021.
அன்புள்ள மாமா,
இங்கு நாங்கள் அனைவரும் நலம். தங்கள் நலனை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
எங்கள் ஊரில் வருகிற மாட்டுப் பொங்கல் அன்று ‘ஏறுதழுவுதல்’ என்ற ‘காளையை அடக்குதல்’ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அவ்விழாவுக்குத் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் வரும்படி அன்புடன் அழைக்கிறேன். உங்கள் வரவை இங்குள்ள அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்கிறோம்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
ச. அழகன்
உறைமேல் முகவரி:
பெறுநர்:
திரு. க. பாபு
11, முல்லை வீதி
சைதாப்பேட்டை
சென்னை 15.
No comments:
Post a Comment