9, முல்லை வீதி
முத்தியால்பேட்டை
புதுவை
22.2.2021.
அன்புள்ள மாமாவுக்கு,
இனியன் எழுதிக் கொள்வது. நலம். நலம் அறிய ஆவல். நாங்கள் சென்ற ஆண்டு உங்கள் இல்லத்துக்கு வந்து இருந்த போது தாங்கள் என்மீது செலுத்திய அன்பும் பாசமும் என்னை நெகிழச்செய்தன.
நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு மூன்று நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. 1 பொதுக்கட்டுரை (மலர்), 2 திருக்குறள், 3 தமிழாற்றுப்படை ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
இனியன்
உறைமேல் முகவரி
பெறுநர்:
ச. பாண்டியன் அவர்கள்
10, தாழை வீதி
அடையாறு
சென்னை 13.
No comments:
Post a Comment