Tuesday, 3 December 2019

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருட்டிணனின் ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.


                                                                                                                                    3, முத்து வீதி,
                                                                                                                                    முத்தியால்பேட்டை,
                                                                                                                                    10.06.2019.
அன்புள்ள முருகனுக்கு,
            வணக்கம். இங்கு அனைவரும் நலம். அங்கு உன் குடும்பத்தாரின் நலத்தை அறிய ஆவல்.
            எனது பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. நீ எனக்கு பரிசாக அனுப்பிய புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
            என் விருப்பம் அறிந்து சிறந்த பரிசுப் பொருளை அனுப்பி இருக்கிறாய். நீ அனுப்பிய புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். நல்ல புத்தகம் படித்த நிறைவு. அந்த மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
            கால் முளைத்த கதைகள்புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உலகமெங்கிலும் உள்ள பழங்குடிகளின் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவை இக்கதைகளில் வெளிப்படுகின்றன.
            பழங்குடிகளிடம் விந்தையான பல கருத்துகள் நிறைந்துள்ளன. அக்கருத்துகளை எளிய, இனிய நடையில் எழுத்தாளர் எழுதியுள்ளார். இந்த நூல் மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. அதற்காக எழுத்தாளருக்கும், இந்த நூலினைப் பரிசாக தந்த உனக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                                    அன்புடன்,
                                                                                                                                    அமுதன்.
உறைமேல் முகவரி
முருகன்,
4, முல்லை வீதி,
மைலாப்பூர்,
சென்னை  18.

No comments:

Post a Comment