முன்னுரை:
‘கல்வி
கரையில கற்பவர் நாள் சில’ என்பர் சான்றோர். கற்பதற்குத் துணைபுரிபவை நூல்கள்.
அந்நூல்கள் உள்ள இடம் நூலகம். சான்றோர்கள் பலரையும், பேச்சாளர்கள் பலரையும்
உருவாக்கிய நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நூலகத்தின்
தேவை:
பள்ளிப்
பாடபுத்தகத்தை மட்டும் படித்து அறிவு பெற்றால் போதும் என்றில்லாமல், பலதுறை
சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவு பெறலாம். வாழ்வியலுக்கான நற்பண்புகலை நூல்களின்
கருத்து வழியே வளர்த்துக்கொள்ளலாம். பேச்சாளர்கள் பலரின் கருத்துகளைப்
படித்தறியலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இக்காரணங்களுக்காக நூலகம்
தேவைப்படுகிறது.
நூலகத்தின்
வகைகள்:
பள்ளி
நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் எனப் பல வகையான
நூலகங்கள் உள்ளன. இவை மட்டும் இன்றி பொது
நூலகத்தின் கீழ் மாநில மைய நூலகம், மாவட்ட நூலகம், வட்டார நூலகம், பகுதி நேர
நூலகம், நடமாடும் நூலகம் போன்றவையும் மக்களுக்கு உதவுகின்றன.
நூலகத்தில்
உள்ளவை:
நூலகத்தில்
கதை, கட்டுரை, கவிதை, கல்வி, பொருளியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம், உலகியல்,
பொறியியல், போன்ற தலைப்புகளில் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
மேலும்,நாளேடுகள், பருவ இதழ்கள் நூலகத்தில் படிக்கக் கிடைக்கும்.
படிக்கும்
முறை:
நூலகத்தில்
சத்தம் போட்டுப் படிக்கக்கூடாது. நூல்களில் எவ்விதக் குறிப்பையும்,
கிறுக்குதலையும் செய்யக்கூடாது. படிக்க விரும்பும் நூல்களை நூலகரின் அனுமதி பெற்று
எடுத்துப் படிக்க வேண்டும். நூல்களைச் சேதம்படுத்தாமல் படிக்க வேண்டும். நூலக
விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முடிவுரை:
எத்துறை
சார்ந்த நூல்களையும் செலவின்றிப் படித்துப் பயன்பெற உதவுவது நூலகம். வாழ்வில்
வெற்றி பெற நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். அறிவு வளரவும், ஆற்றல்
பெருகவும் நூல்களைப் பேணிக் காக்கும் நூலகங்களைப் போற்றிப் பாதுகாப்போம்.
This is awosome
ReplyDeletetysm. i needed this for an essay and you helped me out and i finished this one-week long essay in an hour! :D
ReplyDelete