Tuesday, 3 December 2019

இலக்கிய மன்ற விழாத்தொகுப்புரை


          எங்கள், பள்ளியில் 19.8.2019 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 10 மணியளவில் இலக்கிய மன்ற விழா நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கின. இவ்விழாவில் எங்கள் பள்ளி இலக்கியமன்றப் பொறுப்பாசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமைப் பொறுப்பு ஏற்று அமர்ந்திருந்த தலைமை ஆசிரியர், சட்ட மன்ற உறுப்பினர், சிறப்பு விருந்தினர் தமிழறிஞர் திரு. சிவமாதவன் ஆகியோர் உள்ளிட்ட அவையோர் அனைவரையும் வரவேற்று விழாவினைத் தொடங்கி வைத்தார்.
          இவ்விழாவில் பங்கேற்ற சட்ட மன்ற உறுப்பினர், “இப்பள்ளி அதிக மாணவர்களையும் நல்ல தேர்ச்சியையும் பெற்றுச் சிறப்பாக விளங்குகிறது. அதுபோல் கலைகளிலும் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்” எனப் பேசினார்.
          சிறப்பு விருந்தினராய் வந்திருந்த திரு. சிவமாதவன் அவர்கள், கலைகளின் முக்கியத்துவத்தையும், இலக்கியங்களின் பெருமையினையும் மிக அழகாக மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறினார்.
          தலைமையாசிரியர், இலக்கிய மன்ற விழாவினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தம் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மாணவன் சுகுந்தன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment