முன்னுரை:
‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது பழமொழி. நாம் உடல்
நலத்தோடு இருந்தால்தான் எல்லாச் செல்வங்களையும் பெறவும் அனுபவிக்கவும் முடியும்.
நோயற்ற வாழ்வு வாழ செய்ய வேண்டியவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நோய் வரக்
காரணங்கள்:
மனிதனுடைய வாழ்வு இயற்கையை விட்டு விலகிப் போனதுதான் நோய் வருவதற்கான முதல்
காரணமாகும். மாறிப்போன உணவு முறை, மாசு நிறைந்த காற்று, மன அழுத்தம் ஆகியவை பிற
காரணங்கள் ஆகும். நாம் உண்ணும் உணவு செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து
ஆகியவற்றால் நஞ்சாக்கப்படுகிறது. இவையும் நோய் வரக் காரணமாக அமைகிறது.
நோய்
தீர்க்கும் வழிமுறைகள்:
தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளுதல் உடல் நலத்துக்கு நல்லது. யோகாசனம், தியானம்,
மூச்சிப் பயிற்சி முதலியவற்றை நாம் தினமும் செய்து வந்தால் நோயிலிருந்து
விடுபடலாம். தேவையான அளவு நீரும் உறக்கமும் நம் உடல் நலத்தைக் காக்கும்
மருந்தாகும்.
வருமுன்
காத்தல்:
சுண்டைக்காய், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களை
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிமையாய்க் கிடைக்கக் கூடிய காய்கறிகள்,
கீரைகள், பழங்கள், சிறு தானியங்கள் முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் நோய்
வரும்முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
உணவும்
மருந்தும்:
புரதச்சத்து, கொழுப்பு,
வைட்டமீன்கள், தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள்
நிறைந்த உணவை உண்ணவேண்டும். அத்தோடு உட்கொள்ளும் உணவுப்பொருளின் வெப்ப வெளிப்பாட்டுத்திறனைக்
கணக்கிட்டு உணவை உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியின்
தேவை:
உடற்பயிற்சியைச் சிறுவயதிலிருந்து அனைவரும் செய்ய வேண்டும். தினமும்
உடற்பயிற்சி செய்து வந்தால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.
முடிவுரை:
‘அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிது’ என்பது ஔவையின் வாக்கு. நமக்குக்
கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.
No comments:
Post a Comment