Saturday, 7 December 2019

நீங்கள் சென்று வந்த சுற்றுலாக் குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.


                                                                                                        10, தாழை வீதி,
                                                                                                        முத்தியால்பேட்டை,
                                                                                                        புதுவை- 3.
                                                                                                        10.8.2019
அன்புள்ள நண்பனுக்கு,
                 உன்னை என்றும் மறவாத அழகன் எழுதும் கடிதம். இங்கு அனைவரும் நலம். அதுபோல் உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கை நலம் குறித்து எழுதவும். நான், என் பள்ளி நண்பர்களுடன் கன்னியாகுமரிக்குச் சுற்றுலா சென்று வந்தேன். அது குறித்து இக்கடிதத்தில் எழுதுகிறேன்.
                 இந்தியாவின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரிக்குச் சென்றோம். மிக உயரமான திருவள்ளுவர் சிலை எங்களைப் பிரமிக்க வைத்தது. விவேகானந்தர் பாறைக்குச் சென்று மூன்று கடல்களின் சங்கமத்தைப் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.
                 கன்னியாகுமரியில், காலையில் கண்ட கதிரவனின் உதயக் காட்சியின் நினைவோடு புதுவை வந்தடைந்தோம். நான் கண்ட காட்சிகளை நீயும் கண்டு மகிழ வேண்டும் என்பது என் விருப்பமாகும். வாய்ப்புக் கிடைக்கும் போது நீயும் உன் குடும்பத்தாருடன் கன்னியாகுமரிக்குச் சென்று வரவும்.
                                                                                    இப்படிக்கு,
                                                                           உன் அன்பு நண்பன்
                                                                                     க. அழகன்.
உறைமேல் முகவரி
அ. கதிரவன்,
8, தேரடி வீதி,
முத்து நகர்,
செஞ்சி  604202.

No comments:

Post a Comment